Latestமலேசியா

PLKN 3.0 ; இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விக்கூட மாணவர்களையும், இளைஞர்களையும் உட்படுத்தி இருக்கும்

கோலாலம்பூர், மார்ச் 25 – 3.0 PLKN – தேசிய சேவை பயிற்சி திட்டம், பங்கேற்பாளர்களின் வயது வரம்பு மற்றும் கால வரையறைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும்.

அந்த திட்டம், இடைநிலைப்பள்ளி மாணவர்களையும், உயர்கல்விக்கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் இளைஞர்களையும் உட்படுத்தி இருக்குமென, தற்காப்பு துணை அமைச்சர் அட்லி ஜஹாரி தெரிவித்தார்.

அதனால் தான், அத்திட்டத்தை முடிந்தவரை சிறப்பாக செயல்படுத்த, வயது வரம்பையும், கால வரையறையையும் அமைச்சு நிர்ணயித்துள்ளதாக ஜஹாரி சொன்னார்.

தற்சமயம், 3.0 தேசிய சேவை பயிற்சி திட்டத்திற்கான, பாடத் திட்டம் மற்றும் பயிற்சி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில், இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருவதையும், மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது ஜஹாரி சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!