Latestமலேசியா

கத்தியால் குத்தப்பட்ட பெண் கடுமையாக காயம்; தாக்கியவர் கைது

கோலாலம்பூர், ஜன 30 – பத்தாங் காளியில் இரு பெண்களுக்கிடையே  ஏற்பட்ட தவறான புரிந்துணர்வினால் ஒருவர் கடுமையான  கத்திக்குத்து காயத்திற்கு உள்ளானார்.  தமது வீட்டிற்கு அருகே உள்நாட்டை சேர்ந்த பெண் கத்தியால் குத்தியதால் பெண் ஒருவர் வயிறு, தோள் பட்டை, தலை மற்றும் இரண்டு கைகளிலும் காயத்திற்கு உள்ளானார்.  அந்த பெண் சிகிச்சைக்காக செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.  இந்த தாக்குதலை நடத்திய  31 வயதுடைய பெண் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகே கைது செய்யப்பட்டதாக ஹுலு சிலாங்கூர் போலீஸ் தலைவர் அஹ்மாட் ஃபைசல் தஹ்ரீம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!