Latestமலேசியா

கோலா திரங்கானுவில், பேரங்காடியில் பொருட்களை திருடியதாக பெண் மீது குற்றச்சாட்டு

கோலா திரங்கானு, மார்ச் 27 – கோலா திரங்கானுவிலுள்ள, பேரங்காடி ஒன்றிலிருந்து, ஆடைகள் உட்பட 539 ரிங்கிட் பெருமானமுள்ள பொருட்களை திருடியதாக, குடும்ப மாது ஒருவருக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 46 வயது ரசிதா ரம்லி எனும் அப்பெண் தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

இம்மாதம் 23-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, மாலை மணி 3.30 வாக்கில், கோலா திரங்கானுவிலுள்ள, பேரங்காடி ஒன்றில், 539 ரிங்கிட் மதிப்புடைய 47 வகையிலான பொருட்களை அவர் திருடியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அதனை அங்கு பணியில் இருந்த பாதுகாவலர் ஒருவர் கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டுகள் வரையிலான சிறையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

முன்னதாக, அதே போல பேரங்காடிகளில் திருடுவதை வழக்கமாக கொண்ட அப்பெண், அண்மையில் தான் சிறை தண்டனை முடிந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!