Latestமலேசியா

இஸ்ரேல் நிறுவனங்களின் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட அரசாங்கத்தின் தடைக்கு டாக்டர் மகாதீர் ஆதரவு

கோலாலம்பூர், டிச 21 – மலேசியாவில் எந்தவொரு துறைமுகங்களிலும் இஸ்ரேல் நிறுவனங்களின் கப்பல்கள் நங்கூரமிடுவதற்கு தடைவிதிக்கும் அரசாங்கத்தின் முடிவு சரியானது என்பதோடு அதனை தாம் முழுமையாக ஆதரிப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருக்கிறார். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூரமான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டும். அந்த நாட்டிற்கு எதிரான சாத்தியமான எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை மகாதீர் தமது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இஸ்ரேல் நிவனங்களின் கப்பல்கள் மலேசிய துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு நிரந்தர தடைவிதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்திருந்தார். அடிப்படை மனிதாபிமான பண்புகள் மீறப்பட்டதோடு தோடு பாலஸ்தீன மக்களுக்கு எதிரான படுகொலைகள் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அந்நாட்டிற்கு எதிரான பதிலடியாக அரசாங்கத்தின் முடிவு இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!