Latestமலேசியா

பினாங்கில் பானங்கள் ஆர்டர் செய்யாமல் காப்பிக் கடையில் அமர்ந்திருந்தால் 2 ரிங்கிட் கட்டணம் மீட்கப்பட்டது

ஜோர்ஜ் டவுன், மார்ச் 19 – பானங்களை ஆர்டர் செய்யாதவர்களிடம் 2 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பை வைத்திருந்த இரண்டு காப்பிக் கடைகள் மீது து உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஞாயிற்றுக்கிழமை Lebuh Carnavon னில் இரண்டு காப்பிக் கடை உரிமையாளர்கள் அந்த கட்டண விதிப்பு தொடர்பான அறிவிப்பை எடுத்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பினாங்கு இயக்குனர் எஸ். ஜெகன் கூறினார். 2011 ஆம் ஆண்டின் விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபம் பெறுவதற்கு எதிரான சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு கடைகளிலும் விற்கப்பட்ட உணவு மற்றும் பானங்களின் விலைகளைக் காட்டியுள்ளன.

மேலும் உணவு மற்றும் பானங்களை விற்கும் கடைகள் வாடகைக்கு எடுத்து வணிகம் செய்துவருவதையும் அவர் கூறினார். Kopitiam கடைகளின் உரிமையாளர்கள் இரண்டு ரிங்கிட் கட்டணத்தை விதிக்கவில்லை. அந்த கட்டணங்களை குறிக்கும் அறிவிப்புகள் அங்கு இல்லை என்றும் ஜெகன் கூறினார். பல சுற்றுப்பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களின் அடுத்த இடத்திற்குச் செல்வதற்கு முன் தங்குமிடம் தேடுவதற்காக மட்டுமே வந்ததால் இது நடந்ததாக இரு கடைகளின் உரிமையாளர்கள் விளக்கியதாக அவர் கூறினார். நீண்ட நேரம் செலவழித்த உள்ளூர் வாடிக்கையாளர்கள் இருந்தனர், இதன் விளைவாக புதிய வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு இடமின்றி இருந்து வந்ததையும் கடை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியதாக ஜெகன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!