Latestஇந்தியா

இந்தியாவில் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள 41 தொழிலாளர்களை மீட்க இன்னும் 2 மீட்டரே இடைவெளி

சில்க்யாரா, நவ 28 – இந்தியா, உத்திராகாந்த்தில் கடந்த 17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிக் கொண்டுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய மீட்புக் குழுவினர் இன்னும் 2 மீட்டர் இடைவெளியில்தான் உள்ளனர்.

கைகளால் துளையிடும் பணி முடிவடைந்துள்ளதால் தொழிலாளர்களை மீட்பதற்கு தயார் நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் காத்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தொழிலாளர்களை காண்பதற்காக அவர்களது உறவினர்களும் அந்த சுரங்கப் பகுதியில் கூடியுள்ளனர்.

இந்திய ராணுவப் பொறியாளர்கள் மற்றும் திறமையான சுரங்கத் தொழிலாளர்கள், இறுதி நடவடிக்கையாக “எலி-துளை” எனப்படும் சுரங்க நுட்பத்தைப் பயன்படுத்தி கைகளால் துளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே சுரங்கப் பாதையில் துளையிட்டு அவர்களை காப்பாற்றும் பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!