கோலாலம்பூர், டிச 19 – ஜோகூர் , தாமான் பெர்லிங்கைச் சேரந்த 21 வயது திவாகரன் சந்திரன் இம்மாதம் 13ஆம் தேதியிலிருந்து காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர்.
வெளியே சென்றுவிட்டு வருவதாக அன்றைய தினம் மதியம் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய திவாகரன் இன்னும் வீடு திரும்பவில்லையென அவரது சகோதரி ஜாந்தி வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
“வழக்கம்போலவே எங்கு சென்றாலும் திவாகரன் திரும்பி வந்துவிடுவார் என்பதால் அந்த நம்பிக்கையில் மூன்று நாள்வரை நாங்கள் காத்திருந்தோம். எனினும் கடந்த சில நாட்களாக அவர் வீடு திரும்பாததால் இது குறித்து போலீசில் புகார் செய்திருக்கிறோம்” என ஜாந்தி கூறினார்.
இதனிடையே தமது சகோதரரை காணும் பொதுமக்கள் திரையில் காணும் எண்ணுடன் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
Janthy : 014 – 3802605 அல்லது
Thulasi : 011-21153144