Latestமலேசியா

இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற ஸ்பெயின் பெண் எழுவரால் கூட்டு கற்பழிப்பு ; இதுவரை நால்வர் கைது

புது டெல்லி, மார்ச் 4 – இந்தியாவிற்கு, தனது கணவருடன் சுற்றுலா சென்றிருந்த ஸ்பெயின் பெண் ஒருவர், தாம் ஏழு ஆடவர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

உள்நாட்டு நேரப்படி, கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள, தும்கா மாவட்டத்தில், ஒரு தற்காலிக கூடாரத்தில் இரவை கழித்த போது தமக்கு அந்த கொடூரம் நிகழ்ந்ததாக அப்பெண் கூறியுள்ளார்.

அச்சம்பவம் தொடர்பில், சமூக ஊடக பிரபலமான அப்பெண் பதிவிட்ட காணொளி ஒன்று வைரலானது.

எனினும், அப்பெண் முகத்தில் காயத்துடன் காணப்படும் அக்காணொளி பின்னர், விசாரணை அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் நீக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியில், அப்பெண்ணின் கணவர், ஹெல்மெட்டை கொண்டு தாக்கப்படும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அப்பெண்ணையும், அவரது கணவரையும் அடித்து கொள்ளையிட்ட காட்டுமிராண்டிகள் பின்னர் அவரை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.

63 நாடுகளில், சுமார் 17 ஆயிரம் தூரம் பயணத்தை முடித்துக் கொண்டு அப்பெண், இந்தியாவிற்கு சென்ற போது, அவர் அந்த கொடூரத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இவ்வேளையில், அச்சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைதுச் செய்யப்பட்டுள்ளதை ஜார்கண்ட் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!