பேங்கோக், பிப்ரவரி 16 – தாய்லாந்தில், மிகவும் அழகாக அல்லது கவர்ச்சியாக இருந்ததால், 15 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன் அடி உதைக்கு இலக்கான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது மூயோங் எனும் அந்த பதின்ம வயது இளைஞனை கடந்த ஞாயிற்றுக்கிழமை, கும்பல் ஒன்று தாக்கியது.
அதனால், பலத்த காயங்களுக்கு இலக்கான மூயோங், இரண்டு நாட்களுக்கு சுய நினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், சுய நினைவு திரும்பி குணமடைந்த மூயோங், அச்சம்பவம் குறித்து உள்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியுள்ளான்.
நான்கு நண்பர்களுடன் சிகை அலங்கார கடைக்குச் சென்ற மூயோங்கை, இடைமறித்த நால்வர், அவனை சண்டைக்கு அழைத்துள்ளனர்.
மூயோங்கின் வசீகரத்தால் ஏற்பட்ட பொறாமையால் அவனை தாக்கிய, அந்த 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட நால்வருக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.