கோலாலம்பூர், ஜன 15 – பினாங்கில் செபராங் பெராய், சிம்பாங் அம்பாட்டில் வெளிநாட்டினரை குறிப்பாக மியன்மார் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 52 பேர் கைது செய்யப்பட்டனர். 15 பெண்கள் உட்பட 40 மியன்மார் பிரஜைகளும் அவர்களில் அடங்குவர் . பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட அந்த பொழுதுபோக்கு மையத்தில் நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனையில் கட்டாய கொத்தடிமை வேலைக்கு வைக்கப்பட்ட 17 வயது இளம் பெண் ஒருவரும் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் உளவு மற்றும் நடவடிக்கை பிரிவின் துணை இயக்குனர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார். அந்த பொழுதுபோக்கு மையத்தின் முதலாளி என நம்பப்படும் 29 வயது ஆடவரும் குடிநுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.