பெட்டாலிங் ஜெயா, நவ 25 – ஓராண்டு ஆட்சி நிறைவுக்குப் பின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கான ஆதரவு 68 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக குறைந்திருப்பதாக் மெர்டேக்கா சென்டர் ஆய்வு முடிவை தாங்கள் நேர்மறையான மனதோடு ஏற்பதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் பாமி பாட்சில் கூறியுள்ளார்.
பொதுமக்கள், பொருளாதார நெருக்கடிதான் தங்களுடைய மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறிய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அடுத்தாண்டு பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மக்களின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.
இந்த ஆய்வின் முடிவை தான் கவனத்தில் கொண்டிருப்பதாக நேற்று அன்வார் இப்ராஹிமும் கூறியிருந்தார். இருப்பினும் அந்த ஆய்வு 1200 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த 32 மில்லியன் மலேசியர்களின் கருத்தை அது பிரதிபலிக்கவில்லை என்றார் அவர்.