Latestமலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம்; 9 பேர் கைது, 101 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர், பிப் 26 – கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவரை புக்கிட் அமான் போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொண்டோருக்கு எதிராக செனவாங் டோல் சாவடியில் மேற்கொண்ட நடவடிக்கையில் 101 குற்றப்பதிவுகளை வழங்கியதோடு 9 பேரை கைது செய்தனர். அலட்சியமாக மோட்டார் சைக்கிளோட்டிய காரணத்திற்காக எழுவர் கைது செய்யப்பட்ட வேளையில் தங்களது மோட்டார் சைக்கிள் பதிவு எண்களை சட்டவிரோதமாக மாற்றியது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க விரிவின் இயக்குநர் கமிஷனர் டத்தோ Mohamad Azman Ahmad Sapri தெரிவித்தார்.

அதிகாரிகள் கண்டுப்பிடிக்காமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிள் சட்டவிரோதமாக உருமாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். 16 முதல் 24 வயதுடைய கைது செய்யப்பட்ட அனவைரும் சிராம்பான் போலீஸ் தலைமையகத்தின் பேக்குவரது போலீஸ் நிலையத்திற்கு மேல் நடவடிககைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!