வாஷிங்டன் : மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாடெல்லா அனைத்துலக அளவில் 2023ஆம் ஆண்டின் சிறந்த தலைமைச் செயல் அதிகாரியாக அமெரிக்காவின் CNN ஊடகத்தால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சேட் ஜி.பி.தி ‘ChatGPT’ போன்ற செயலிகளில் AI, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை துணிந்து பயன்படுத்திய பெருமை இவரையே சாரும்.
இதர தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்ய முன்வராத நிலையில் பல பில்லியன் அமெரிக்க டாலர்களை இதில் துணிந்து முதலீடு செய்தார் சத்யா.
இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான சத்யா, 1980ஆம் ஆண்டுகளில் முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
மைக்ரோசோப்ட் நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக இணைந்த இவர் பின்னர் கடுமையான உழைப்பினால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.
இந்த ஆண்டு மைக்ரோசோப்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலையும் பங்குச் சந்தையில் 55 விழுக்காடு உயர்வு கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.