நியூ யார்க், டிச 15 – உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜெண்டினா குழுவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு டீசட்டைகள் நியூ யார்கில் 7.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த டீ சட்டைகள் ஏல விற்பனையில் செய்யப்பட்ட தொகையைவிட இது அதிகமாகும் என Sotheby’s ஏல நிறுவனம் தெரிவித்தது. இவ்வாண்டு ஏலமிடப்பட்ட பிரபலமான விளையாட்டு நினைவு பொருளாக லியோனல் மெஸ்ஸியின் அந்த டீ சட்டைகள் திகழ்கின்றன. கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் முற்பகுதியின்போது அவர் அணிந்திருந்த டீ சட்டையும் ஏலமிடப்பட்ட உடையில் அடங்கும்.
Related Articles
ஹாலிவூட் படத்தில் சிறப்புத் தோற்றம்; உள்ளூர் செய்தி வாசிப்பாளர் மோகனபிரியாவின் புதிய மைல்கல்
10 hours ago
தீபகற்ப மலேசியாவில், வரும் ஞாயிறு வரை மோசமான வானிலை நீடிக்கலாம் : மெட்மலேசியா எச்சரிக்கை
10 hours ago
Check Also
Close