Latestமலேசியா

‘நாசி கண்டார்’ வாங்குவதற்காக பினாங்கில் நங்கூரமிட்டிருந்த சிறு உல்லாசக் கப்பல் மூழ்கியது

ஜோர்ஜ் டவுன், பிப்ரவரி 29 – பினாங்கு நீரிணையில், “enjin generatorவெடித்ததில் சிறு ரக உல்லாசக் கப்பல் ஒன்று மூழ்கியது.

அச்சம்பவம் நேற்று பிற்பகல் மணி ஒன்று வாக்கில் நிகழ்ந்தது.

நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் இருந்து லங்காவி நோக்கி நால்வருடன் பயணமான அக்கப்பல், “நாசி கண்டார்உணவை வாங்குவதற்காக பினாங்கு, ஜெலுத்தோங்கில் நின்ற போது அந்த வெடிப்பு ஏற்பட்டது.

எனினும், சம்பவத்தின் போது அக்கப்பலில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க நால்வர், மீனவர்களின் உதவியோடு காப்பாற்றப்பட்டதை, ஜாலான் பேராக் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் A’ Azelan Hassan உறுதிப்படுத்தினார்.

தரையிலிருந்து சுமார் 300 முதல் 400 மீட்டர் தூரத்தில் மூழ்கிய அக்கப்பல், பின்னர் கடல் துறை அதிகாரிகளின் உதவியோடு, குளுகோருக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!