Latestமலேசியா

பினாங்கில் இடிந்த கட்டிடத்தில் தேடப்பட்டு வந்த நால்வர்; புதையுண்டவில்லை, மாறாக தப்பியுள்ளனர்

ஜார்ஜ் டவுன், நவ 30 – பத்து மாவுஙில் இடிந்து விழுந்த ஒரு தளவாடக் கிடங்கின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நான்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உண்மையில் அந்த சம்பவத்திற்கு பின் அங்கிருந்து தப்பியோயடியது தெரியவந்ததோடு அவர்கள் பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மணி 6.30 அளவில் இடிபாடுகள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அந்த நான்கு வங்காளதேச தொழிலாளர்களும் ஆவணங்கள் இல்லாததால் பயந்து தப்பியோடியதாக பினாங்கு போலீஸ் துணைத்தலைவர் முகமட் உசுப் ஜான் முகமட் தெரிவித்தார்.

விசாரணைக்காக அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன்வழி செவ்வாய்க்கிமை இரவு அந்த கட்டிடடத்தின் கூரைப்பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் வங்காளதேச தொழிலாளர்களில் மூவர் மாண்ட வேளையில் இருவர் காயம் அடைந்தனர் என இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!