கோத்தா கினபாலு, நவ 2 – சபாவின் கிழக்குக்கரையான செம்போர்னா மாவட்டத்தில் சுற்றுலா பஸ் ஒன்று லோரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சீன சுற்றுப்பயணி ஒருவர் இறந்ததோடு மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். செம்போர்னா-தவாவ் சாலையில் 21ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் செம்போர்னாவிலிருந்து தவாவ் வட்டாரத்திலுள்ள விமான நிலையத்திற்கு அந்த பஸ் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லோரியில் மோதியது . இந்த விபத்தில் 56 வயதுடைய ஆடவர் மரணம் அடைந்ததோடு ஐந்து பெண்கள் உட்பட 14 சீன சுற்றுப்பயணிகள் உயிர் தப்பியதாக செம்போர்னா போலீஸ் தலைவர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவத்தில் கால் முறிவுக்கு உள்ளான லோரி ஓட்டுனர் தாவாவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.