கோலாலம்பூர், பிப்ரவரி 23 – சனிக்கிழமைகளிலும், பொது விடுமுறை நாட்களிலும் பணிப்புரியும் மருத்துவ அதிகாரிகள், ஒரு மணி நேரத்திற்கு என்பது ரிங்கிட், ‘லோகம்’ அலவன்ஸ் தொகையை பெற தகுதியானவர்கள்.
அந்த தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக் வழங்கப்படுமென, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
கூடுதல் நேரம் வேலை செய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு அது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், ஞாயிற்றுக்கிழமை, காலை மணி ஒன்பது தொடங்கி பிற்பகல் மணி ஒன்று வரை வேலை செய்யும் மருத்துவ பணியாளர்கள், அதற்கான மாற்று விடுமுறையை பெற்றுக் கொள்ளலாம்.
முன்னதாக, மருத்துவமனைக்கு அருகிலுள்ள கிளினிக்குகளின் சேவை நேரத்தை நீட்டிக்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் லோகம் அலவன்ஸ் தொகையை அதிகரிப்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருவதாக கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.