Latestஉலகம்

அமெரிக்காவின் தென் கிழக்கே புயல் தாக்கியது; மூவர் மரணம் புளோரிடாவில் அவசரநிலை பிரகடனம்

வாஷிங்டன், ஜன 11 – அமெரிக்காவின்  தென்கிழக்கே வீசிய புயலில் மூவர் மாண்டனர்.  இதனைத் தொடர்ந்து புளோரிடா மாநிலத்தில் அவசர நிலையை அம்மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் பிரகடனப்படுத்தியுள்ளார்.  புளோரிடாவில் வீசிய புயல் பெரிய அளவில்   சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.  புளோரிடா முதல்  வர்ஜீனியா வரை  தொடர்ந்து புயல் வீசும் என வானிலை அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடாவிலுள்ள   67  மாவட்டங்களில்  49 இல் டிசாண்டிஸ் அவசர நிலையை  பிரகடனப்படுத்தியுள்ளளார். புயலினால்  பல இடங்களில் மரங்கள்  சாய்ந்ததோடு  கட்டிடங்களும் சேதம் அடைந்ததோடு   ஆயிரக்கணக்கான மக்கள்  தங்களது வீடுகளில் மின் விநியோகத்தை  இழந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!