Latestஉலகம்

வாஷிங்டனில், தவறுதலாக ‘அவுனில்’ வைக்கப்பட்ட குழந்தை மரணம்

வாஷிங்டன், பிப்ரவரி 12 – அமெரிக்காவில், தவறுதலாக “அவுன்” அல்லது சூளையில் வைக்கப்பட்ட, பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தை நன்கு உறங்க ஏதுவாக தாய் அதனை அவுனில் வைத்ததாக கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மிசோரியில் அத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

குழந்தை ஒன்று மூச்சுத் திணறலுக்கு இலக்கானது குறித்து போலீசுக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அச்சம்பவம் அம்பலமானது.

உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தை ஒன்று உடல் முழுவதும் எரியூண்ட நிலையில் மூச்சு பேச்சி இல்லாமல் அசைவின்றி கிடந்ததை கண்டனர்.

விசாரணையில், அக்குழந்தையின் தாய், சற்று நேரம் உறங்க ஏதுவாக, தவறுதலாக அதனை தொட்டிலில் போடுவதற்கு பதிலாக, அவுனில் வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக சம்பந்தப்பட்ட பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!