தனிப்பட்ட நபர் ஒருரிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துவற்கு உடந்தையாக 20.000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை போலீஸ் சார்ஜென்ட் S. உஷா நந்தினி மறுத்தார். செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி நோரைடா சுலைமான் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டபோது 35 வயதுடைய உஷா நந்தினி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். செகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் சார்ஜன்டாக வேலை செய்து வந்த அவர் ஆடவரிடமிருந்து 20,000 ரிங்கிட்டை லஞ்சமாக பெற்றதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது.
நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆடவரின் மனைவி ஒருவர் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கைது செய்யாமல் இருப்பதற்காக அந்த தொகையை லஞ்சமாக பெற்றதாக உஷா நந்தினி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 12,000 ரிங்கிட் ஒரு நபர் உத்தரவாத ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார். மார்ச் 24ஆம் தேதி அவருக்கு எதிரான குற்றச்சாட்டு மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.