Latestஉலகம்

மெக்சிக்கோவில் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்வில் தாக்குதல் – 12 பேர் மரணம் மேலும் பலர் காயம்

மெக்சிக்கோ சிட்டி , டிச 18 – மெச்சிக்கோவின் மத்திய பகுதியில் கிறிஸ்துமஸ் பெருநாளுக்கு முன்னதாக வழக்கமாக ஏற்பாடு செய்யப்படும் விருந்தின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். சால்வதியர்ரா என்ற நகரில் நேற்று விடியற்காலை மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலில் காயம் அடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் அம்சங்களை கொண்ட கதையை அறிந்துகொள்ளும் நோக்கத்தில் நடத்தப்பட்ட அந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலோர் பதின்ம வயதினர் என தெரிவிக்கப்பட்டது. அந்த விருந்து நடைபெற்ற இடத்திற்கு இரண்டு டிரக்குகளில் திடீரென வந்த ஆயுதம் ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!