புத்ராஜெயா, மார்ச் 28 – 20 ஆண்டுகளுக்கு முன், ஜெர்மனியில் பிறந்த ஆஸ்திரேலிய தொழிலதிபரை கொலை செய்த இளைஞரின் மரண தண்டனையை, 35 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக குறைத்து, கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, தற்போது 39 வயதாகும் லோ கியான் பூன் எனும் அவ்வாடவனுக்கு, 12 பிரம்படிகளையும் தண்டனையாக விதித்து மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தீர்ப்பளித்தது.
2003-ஆம் ஆண்டு, நவம்பர் 12-ஆம் தேதி, ஹான்ஸ் ஹெர்சாக்கைக் கொலை செய்ததற்காக, லோ கியான் பூனுக்கு மரண தண்டனை விதிக்கபட்டது.
வீட்டில் அத்துமீறி நுழைந்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை 23 முறை வெட்டி கொலை செய்த குற்றத்திற்காக, அப்பொழுது வெறும் 18 வயதே ஆன லோவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
லோவுக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றொரு நபர், 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில், பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.