கோலாலம்பூர், ஜன 18 – அரசாங்க தலைமைச் செயலாளர் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் பொய்யானது என எம்.ஏ.சி.சி (MACC)-யின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்தார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாக சுகியின் அலுவலகம் உறுதிப்படுத்தியதாக டுவிட்டர் பயனர் ஒருவர் கூறியிருந்தார். முக்கிய வழக்குகளில் சம்பந்தப்பட்டது, பல வீடுகள் , ஆடம்பர கார்கள் மற்றும் சொத்துக்கள் வைத்திருப்பது தொடர்பில் சுகி அலி மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என அசாம் பாக்கி விளக்கம் அளித்தார்.
Related Articles
பெற்றோர்கள் கவனத்திற்கு! இந்தியாவில் விற்கப்படும் குழந்தைகளுக்கான நெஸ்லே உணவில் அதிகமான சர்க்கரை சேர்ப்பு
6 hours ago
கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் – வி.கே.கே ராஜசேகரன் நேரடிப் போட்டி
7 hours ago