ஜார்ஜ் டவுன், பிப் 9 – பினாங்கு மெடான் திரெங்கானுவில் தனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவரது மூன்று வளர்ப்பு நாய்களை கட்டத் தவறியதால் அவை தம்மை கடித்து காயப்படுத்தியதால் பெண் ஒருவர் பெரும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளார். 49 வயதுடையை சீ ஹீன் ஹூன் என்ற அந்த பெண் தனது உடலின் பல பாகங்களில் காயம் அடைந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளானார். நேற்று மாலை மணி 5 அளவில் தமது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கர அனுபவத்தை சந்தித்ததாக சீ கூறினார். அந்த வீட்டை கடந்து சென்றபோது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து நாய்கள் ஓடிவந்து தம்மை கடித்து குதறியதால் உதவிக்கு எவரும் வராத நிலையில் தாம் தப்பியோட முடியாமல் தனி ஆளாக போராடியதாக சீ தெரிவித்தார்.
என் இடது மற்றும் வலது தொடையிலும் கையிலும் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வார்டில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தனது உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறியதாகவும் அவர் கூறினார். நாளை சீனப் புத்தாண்டு என்பதால், இன்று வார்டிலிருந்து வெளியேறுவதற்கு மருத்துவர் அனுமதித்தார், ஆனால் ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் நான் மருத்துவமனைக்கு வர வேண்டும், ஊசி போட வேண்டும் என்று மருத்துவர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் சீ விவரித்தார்.