சிரம்பான், நவம்பர் 8 – மனைவி வேறொரு ஆணுடன் செல்வதை தடுக்க முயன்ற 34 வயது ஆடவர் ஒருவர், தமது உயிரை பனையம் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடந்த வியாழக்கிழமை, இரவு மணி 9.30 வாக்கில், போர்ட் டிக்சன் டோல் கட்டண சாவடிக்கு அருகே அச்சம்பவம் நிகழ்ந்தது.
மனைவி வேறொரு ஆடவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்து கொண்ட டேவிட் என மட்டும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அவர், விவகாரத்து, விசா அனுமதி மற்றும் வியாபார ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு சுமூகமான முறையில் தீர்வுக் காண அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.
எனினும், பேச்சு வார்த்தையின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த 29 வயது வியட்நாமிய பெண் தனது காதலனின் காரில் ஏரி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்ற டேவிட்டை அவர்கள் மோதித் தள்ள முயன்ற போது அவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அச்சம்பவம் தொடர்பில் புகார் ஒன்றை பெற்றுள்ளதை, சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அரிபாய் உறுதிப்படுத்தியுள்ள வேளை ; மாற்றான் மனைவியை தீங்கிழைக்கும் நோக்கத்தில் கவர்ந்திழுத்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.