Latestமலேசியா

கடந்தாண்டு, RM183.3 பில்லியன் வருமான வரி வசூல்; வரலாற்றில் பதிவுச் செய்யப்பட்ட மிகப் பெரிய தொகை அதுவாகும்

கோலாலம்பூர், பிப்ரவரி 16 – LHDN – உள்நாட்டு வருமான வரி வாரியம், கடந்தாண்டு, 18 ஆயிரத்து 330 கோடி ரிங்கிட் வருமான வரியை வசூல் செய்துள்ளது.

அதற்கு முந்தையை ஆண்டுடன் ஒப்பிடுகையில், அது 4.49 விழுக்காடு அல்லது 780 கோடி ரிங்கிட் அதிகமாகும்.

அதோடு, வரலாற்றில் இதுவரை வசூலிக்கப்பட்ட மிக அதிகமான தொகை அதுவென, உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடின் தெரிவித்தார்.

அதனால், வருமான வரியை முறையாக செலுத்திய அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டு, 19 ஆயிரத்து 700 கோடி ரிங்கிட் வரியை வசூலிக்க, உள்நாட்டு வருமான வரி வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!