பண்டார் செரி பெகவான், ஜனவரி 12 – புருனையின் இளவரசரும், பிரபல போலோ விளையாட்டாளருமான அப்துல் மதின், எண்ணெய் வளம் கொழிக்கும் அந்நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பத்து நாள் ஆடம்பர கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தனது சாமானிய வருங்கால மனைவியை நேற்று கரம்பிடித்துள்ளார்.
32 வயது இளவரசருக்கும், 29 வயதான யாங் மூலியா அனிஷா ரோஸ்னாவுக்கும், தலைநகர் பண்டார் செரி பெகவானிலுள்ள, தங்க குவிமாடம் கொண்ட பள்ளிவாசலில், இஸ்லாமிய முறைப்படி, கோலாகலமாக நடைபெற்றது.
மதின், உலகின் நீண்ட முடியாட்சி மன்னராக திகழ்பவரும், உலகின் முன்னாள் கோடீஸ்வரருமான, புருனை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியாவின் பத்தாவது புதல்வர் ஆவார்.
மதின் கரம் பிடித்துள்ள பெண், அவரது தந்தையின் முக்கிய ஆலோசகர் ஒருவரின் பேத்தியும், பேஷன் பிராண்ட் மற்றும் சுற்றுலாத் தொழிதுறையின் இணை உரிமையாளரும் ஆவார்.
வரும் ஞாயிற்றுகிழமை, ஆயிரத்து 788 அறைகள் கொண்ட அரண்மனையில், அவர்களின் அரச திருமணத்துக்கான ஊர்வலத்துடன் ஆடம்பர வரவேற்பும் நடைபெறும் என கூறப்படுகிறது.
அந்த விருந்துபசரிப்பில், சர்வதேச அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள்.