Latestமலேசியா

ஈப்போவில் பொழுதுபோக்கு மையங்களில் விடிய விடிய சோதனை – 117 விலைமாதர்கள் கைது

ஈப்போ, ஜன 13 – ஈப்போவில் நேற்றிரவு தொடங்கி இன்று விடியற்காலை வரை ஐந்து பொழுதுபோக்கு மையங்களில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 117 விலைமாதர்கள் மற்றும் GRO எனப்படும் வாடிக்கையாளர்களை உபசரிக்கும் பெண்கள் கைது செய்யப்பட்டனர். அந்த நடவடிக்கையில் 131 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். மேலும் உள்நாட்டைச் சேர்ந்த ஏழு ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் நடவடிக்கை பிரிவுக்கான அதிகாரி ஜாஃப்ரி எம்போக் தாஹா தெரிவித்தார். சீனாவைச் சேர்ந்த 52 பெண்கள், வியாட்னாமைச் சேர்ந்த 41 பெண்கள், 21 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!