Latestமலேசியா

விபத்தில் நான்கு சக்கர வாகனம் கால்வாயில் விழுந்தது; இருவர் மூழ்கி மரணம்

ஈப்போ, டிச 2 9 – பேராவில் ஜாலான் போத்தா கிரி – தஞ்சங் பெலாஞ்சாவில் கம்போங் புலாவ் பிசாங்கில் விடியற்காலையில்  நான்கு சக்கர வாகனம் ஒன்று  கட்டுப்பாட்டை இழந்ததைத்  தொடர்ந்து  அதில்  சிக்கிக் கொண்ட  இருவர் மூழ்கி மாண்டனர். 

 39  வயதுடைய ஆடவர் ஓட்டிச் சென்ற டொயோட்டா ஹிலக்ஸ் வாகனத்தில் 25 வயதுடைய   பயணியும் அதில் அமர்ந்திருந்தார். அவ்விருவரும்  அதற்கு முன்னதாக அந்த வாகனத்தில்  கம்போங் புலாவ் பிசாங் தோட்டத்தில் செம்பனை   குழாய்களை   ஏற்றியதாக  பேராக்  தெங்கா மாவட்ட  போலீஸ் துணைத்தலைவர் DSP முகமட் உசிர் இஸ்மாயில் தெரிவித்தார்.  

அந்த விபத்திற்குப் பின்   கால்வாயில் வாகனம்  விழுந்தபோது வாகன ஓட்டுனரும்    அதன் பயணியும்  உள்ளே சிக்கிக் கொண்டதாக  அவர் கூறினார்.  சம்பவம்  நிகழ்ந்த இடத்திற்கு  வருகை புரிந்த  தீயணைப்பு   படை வீரர்கள்  அந்த இருவரையும்    வாகனத்திலிருந்து வெளியே கொண்டுவந்தாக முகமட் உசிர் இஸ்மாயில்  வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார். அந்த வாகனம் தார் போடப்படாத  குறுகிய பாதையில் சென்றபோது விபத்துக்குள்ளாகியதாக முகமட் உசிர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!