Latestமலேசியா

போதைப் பித்தனை பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட கைகலப்பில் போலீஸ்காரர் காயம்

ஜோர்ஜ் டவுன், மார்ச் 7 – பினாங்கில் Teluk Kumbar- ரில் போலீசார் மேற்கொண்ட Port Ketum சோதனை நடவடிக்கையின்போது தப்பியோடிய போதைப் பித்தன் ஒருவனை கைது செய்ய முயன்ற போலீஸ் constable ஒருவர் இடது கையில் 7 தையல்கள் போடும் அளவிற்கு காயம் அடைந்தார். Barat Daya மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றிவரும் 28 வயதுடைய போலீஸ்காரரை அந்த போதைப் பித்தன் தாக்கியதாக பினாங்கு மாநில இடைக்கால போலீஸ் தலைவர் Mohamed Usuf Jan Mohamad தெரிவித்தார். போலீஸ்காரர்கள் வந்ததை அறிந்த போதைப் பித்தர் ஒருவன் தப்பியோட முயன்றபோது அவனது முயற்சியை முறியடிக்க முயன்ற போலீஸ்காரருடன் ஏற்பட்ட கைகலப்பின்போது அவரை அந்த சந்தேகப் பேர்வழி தாக்கியுள்ளான். அந்த போலீஸகாரரின் நிலைமை சீராக இருப்பதோடு தற்போது அவர் மூன்று நாட்கள் மருத்துவ விடுமுறையில் இருப்பதாக Mohamad Usuf கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!