லண்டன், டிச 26 – ஒவ்வொரு முறையும் கர்ப்பமானால் தனது கணவர் 300,000 அமெரிக்க டாலர் அதாவது 1.39 மில்லியன் ரிங்கிட் ‘அலவன்ஸ்’ கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளார் 26 வயதான மனைவி ஒருவர். அதற்கும் அந்த கணவரும் உறுதியளித்திருப்பதாக கூறியுள்ளார் ஒரு கோடிஸ்வரரின் மனைவியான அவர்.
ஆக இரண்டு குழந்தைகள என்றால் 600,000 அமெரிக்க டாலர் அதாவது 2.79 மில்லியன் ரிங்கிட்ட அலவன்ஸ் அவருக்கு கிடைக்கும். அது தவிர தனது கணவரின் “கிரெடிட் கார்ட்டையும் எந்நேரத்திலும் பயன்படுத்தவும் அவர் அந்த ஒப்பந்தத்தில் அனுமதி பெற்றுள்ளார்.
துபாயில் வசிக்கும் சவுதி அல் நாடக் எனும் அப்பெண் பிரிட்டனைச் சேர்ந்தவர். தற்போது திருமணமாகி 3 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகிறார்.
அண்மையில் அவர் தனது டிக் டோக்கில் வெளியிட இதுகுறித்த பதிவை 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
“நான் கர்ப்பமாவதற்கு முன், இவை அனைத்தும் பேரம் பேச முடியாதவை. கர்மமான பிறகும் போட்ட ஒப்பந்தத்தை மாற்ற முடியாது. இதில் சிகிச்சை அமர்வுகள், பிசியோதெரபி, தனிப்பட்ட பயிற்சியாளர்கள், அக்குபஞ்சர் மருத்துவம் மற்றும் குழந்தைகளுக்கான மசாஜ் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என அவர் கூறியிருக்கின்றார்.
அதே சமயத்தில் தமது கணவர் மற்றும் குழந்தைக்காக தாம் எப்போதும் சுறுசுறுப்பாகவும் நல்ல உடல் நலத்தோடும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.