பத்து பஹாட், ஏப்ரல் 1 – ஜோகூர், பத்து பஹாட்டிற்கு அருகில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலை அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மோதி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி மூன்று வாக்கில், கார் ஓட்டுனர் தொலைப்பேசியில் பேச ஏதுவாக, நெடுஞ்சாலை அவசரப் பாதையில் தனது காரை நிறுத்தியபோது அவ்விபத்து நிகழ்ந்தது.
அவ்விபத்தில், 35 வயது முஹமட் பாரிட் ஜகாரியா எனும் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை, பத்து பஹாட் இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா சானி உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின் போது, ஆயிர் இத்தாமிலிருந்து பாகோ நோக்கி பயணமான அந்த இளைஞர், நெடுஞ்சாலை அவசரப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பின்னாலிலிருந்து மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், தலையில் பலத்த காயமும், இரு கைகள் முறிவுக்கும் இலக்கான அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.