Latestமலேசியா

“அம்மாவை மன்னித்துவிடு”; காகித குறிப்புடன் குப்பைத் தொட்டியிக் கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம்

சபா, டிச 23 – “அம்மாவை மன்னித்து விடு.என் குழந்தையை ஒரு நல்ல இடத்தில் சேர்த்து விடுங்கள். உங்கள் உதவிக்கு நன்றி. என்னை தேடாதீர்கள். இந்த சூழலை நானும் எதிர்பார்க்கவில்லை. “ .

இதுதான், சபா கோத்தா கினாபாலுவில் உள்ள பேரங்காடியின் கழிவறை குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிசிவின் சடலத்தில் இருந்த காகித குறிப்பின் உள்ளடக்கமாகும்.

முன் தினம் இரவு, கழிவறையின் பெண்களுக்கான நேப்கின்களை வீசும் குப்பைத் தொட்டியின் நெகிழிப் பையை மாற்றும் போது ஊழியர் ஒருவர் அல்குழந்தையின் சடலத்தைக் கண்டுள்ளார்.

உடனே போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட சிசுவின் சடலம் ஒரு முழுமையாக வளர்ந்த ஒரு சிசுவாகும். ஒரு துண்டால் அந்த சிசு சுற்றப்பட்டிருந்தாக போலிசார் கூறியிள்ளனர்.

இந்த காரியத்தை செய்தவரை அடையாளம் காண அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!