Latestமலேசியா

தஞ்சோங் காராங்கில், மூன்று வாகனங்களை உட்படுத்திய விபத்து ; ஒருவர் பலி, எண்மர் காயம்

தஞ்சோங் காராங், டிசம்பர் 18 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், ஜாலான் பெர்னாமில், மூன்று வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஒருவர் உயிரிழந்த வேளை ; இதர எண்மர் காயமடைந்தனர்.

நேற்றிரவு மணி பத்து வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்ததை, மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணைதுணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.

அவ்விபத்தில் உயிரிழந்தவர், 23 வயது நோர்ஷாம் நசுலா ரஹிம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைவதற்கு முன்னரே, விபத்துக்குள்ளான புரோடுவா பெஸ்ஸா, நிசான் அல்மேரா மற்றும் ஹோண்டா சிட்டி கார்களில் சிக்கிக் கொண்டிருந்தவர்கள், பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டதாக, முக்லீஸ் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!