சிரம்பான், பிப் 29 – Telcos எனப்படும் தொலைதொடர்பு நிறுவனங்களின் கோபுரங்களில் நடந்த திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார் 1.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய கேபள்கள் உட்பட பல்வேறு தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்தனர். Taman Kelab Tuanku வில் உள்ள ஒரு கோபுரத்திலிருந்து 300 மீட்டர் நீளத்திற்கான நேரடி இணைப்பு Cable துண்டிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக பிப்ரவரி 20ஆம் தேதி போலீஸ் புகாரை பெற்றதோடு அதில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை பிடிப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டதாக சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Hatta Che Din தெரிவித்தார்.
மறுநாள் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் 14 ஆடவர்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டதோடு தொலை தொடர்பு கோபுரங்களில் திருடப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த 14 ஆடவர்களில் ஒருவர் வங்காளதேசியாவார். 25 மற்றும் 50 வயதுக்குட்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிகளில் நால்வர் பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர். DC கேபல்களைத் தவிர்தது Radio remote யூனிட்டுகள் மற்றும் Lithium பேட்டரிகளையும் அவர்கள் திருடியிருப்பதாக Hatta Che Din கூறினார்.