புத்ரா ஜெயா, ஜன 2 – துபாய் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ஐக்கிய அரபு சிற்றரசில் தரையிறங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து தாம் அறிந்திருந்ததாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். குறிப்பிட்ட சில தலைவர்கள் துபாய் செல்வதற்கு முன்னதாகவே, இது குறித்து சில தனிப்பட்ட நபர்கள் எங்களிடம் தெரிவித்தாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். எனினும் அந்த சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.
எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரும், அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில பிரதிநிதிகளும் அண்மையில் ஐக்கிய அரபு சிற்றரசிற்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் தொடர்பான ஆருடங்கள் வெளியாகின. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவு வழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணக்கூடிய தரகர்களை பிரித்து பேச்சு நடத்தும் பணியை மேற்கொள்வது தொடர்பில் அந்த கலந்துரையாடல் நடத்தும் நோக்கம் இருந்ததாக கூறப்பட்டது.