செம்பூர்னா, ஜன 11 – சபாவில் செம்போர்னா பொது படகுத்துறையில் விடியற்காலையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 20 கிலோவுக்கும் மேற்பட்ட ஷாபு போதைப் பொருளை கடத்தும் முயற்சியை போலீசார் முறியடித்ததோடு மூவரை கைது செய்தனர். அவர்களில் இருவர் உள்நாட்டவர் என்பதோடு மற்றொருவர் வெளிநாட்டவர் என செம்போர்னா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார். கடல்வழியாக வந்த இயந்திரப் படகில் இருந்த அம்மூவரும் சந்தேகத்திற்குரிய வகையில் நடந்து கொண்டதால் அவர்களை கைது செய்ய முயன்றபோது தப்பியோட முயன்றனர். எனினும் அவர்களை போலீசார் வளைத்த பிடித்தபோது அவர்கள் வந்த படகில் இரண்டு பேக்குகளிலிருந்து ஷாபு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக முகமட் ஃபர்ஹான் கூறினார். அந்த இரு பேக்குகளிலும் கருப்பு நிறுத்திலான 20 பொட்டலங்களில் இருந்த ஷாபு போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக முகமட் ஃபர்ஹான் தெரிவித்தார். அந்த போதைப் பொருள் அண்டை நாட்டிற்கு கடத்தப்படவிருந்ததாக அவர் கூறினார்.
Check Also
Close