பிரிட்டோரியா , மார்ச் 19 – உயிரியல் பூங்காவில் முதலையைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ஊழியர் ஒருவர் முதலையுடன் நடைபெற்ற சாகச காட்சியில் அந்த முதலை திடீரென தாக்கி கொல்ல முயன்றதால் அவர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அவர் அந்த முதலையை ஒரு குச்சியால் அடிக்கடி குத்திக்கொண்டிருந்தபோது அந்த முதலை திடீரென அந்த ஊழியரை கடிக்கத் தொடங்கியது. தனது பிடியை விட மறுத்ததால் அந்த ஊழியர் அச்சத்திற்கு உள்ளானார். தனது தாடையை அதன் இடுப்புக்கு கீழே இறுக்கிய பின் அந்த ஊழியரை தரையில் வீசியது. அந்த நேரத்தில் மற்றொரு சிறிய முதலையும் அவரை தாக்குவதற்கு விரைந்தது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகளும் அலறத் தொடங்கினர். இறுதியில் அந்த முதலை பிடியை விட்டவுடன் அந்த ஊழியர் தன்னை காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஓடினார். இதனைத் தொடர்ந்து அந்த ஊழியர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.