Latestமலேசியா

சுபாங் ஜெயா, USJ4-கில் வீடு தீக்கிரையானது ; மூதாட்டி பலி

சுபாங் ஜெயா, மார்ச் 15 – சிலாங்கூர், சுபாங் ஜெயா, USJ4-கிலுள்ள, வீடொன்றில் ஏற்பட்ட தீயில், வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பின்னிரவு மணி 1.15 வாக்கில், அந்த தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததை, சிலாங்கூர் மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் அஹ்மாட் முக்லீஸ் முக்தார் உறுதிப்படுத்தினார்.

சுபாங் மற்றும் பூச்சோங் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்தை சென்றடைந்த போது, சம்பந்தப்பட்ட வரிசை வீடு 60 விழுக்காடு தீக்கிரையாகி இருந்த வேளை ; வாகனம் ஒன்றும் சேதமடைந்திருந்தது.

பின்னிரவு மணி 1.40 வாக்கில் தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீக்கிரையான அந்த வீட்டிலிருந்து, 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீட்கப்பட்ட வேளை ; அவர் உயிரிழந்து விட்டதை மருத்துவ பணியாளர்கள் பின்னர் உறுதிப்படுத்தினர்.

எனினும், அந்த வீட்டியிலிருந்து மீட்கப்பட்ட 70 வயது மதிக்கத்தக்க ஆடவர், வெறும் மூச்சுத் திணறலுக்கு மட்டுமே இலாக்காகி இருந்ததாக முக்லீஸ் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!