
அமெரிக்கா , ஜன 31 -அமெரிக்காவில் கோவிட்-19 அவசரக் காலப் பிரகடனம் மே 11-ஆம் தேதியுடன் மீட்டுக் கொள்ளப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக, கடந்த மூன்றாண்டுகளாக அமலில் இருக்கும் அந்த அவசரக் காலப் பிரகடனம் மே மாதம் மீட்டுக் கொள்ளப்படுமென அதிபர் Joe Biden-னின் நிர்வாகம் நேற்று அறிவித்தது.
2020-ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் Donald Trump-பால் அறிவிக்கப்பட்ட அந்த அவசரக் காலத்தை நடப்பு அதிபர் Biden சில முறை நீட்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.