
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 5 – கட்சியின் இரண்டு உயரிய பதவிகளுக்கு போட்டியிருக்கக்கூடாது என்ற தீர்மானத்தை ROS எனப்படும் சங்கங்களின் பதிவகம் ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் உள்துறை அமைச்சின் கடிதத்தை அம்னோ பெற்றுள்ளது. நேற்றிரவு Eastin Hotel லில் கட்சியின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டபோது அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் Ahmad Zahid இதனை தெரிவித்தார். இதன்வழி அம்னோவில் மூன்று உதவித் தலைவர் பதவிகள், உச்சமன்ற உறுப்பினர்கள் , மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி ஆகிய பிரிவுகளுக்கு மட்டுமே போட்டியிருக்கும் என அவர் கூறினார். இது ஆரோக்கயமான போட்டியாக இருக்கும் என ஸாஹிட் நம்பிக்கை தெரிவித்தார்