காஸா முனை, நவ 1 – காஸாவிலுள்ள மிகப் பெரிய அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததோடு 150 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதர அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பொறுப்பான ஹமாஸ் தரப்பின் தளபதியை இலக்காகக் கொண்டு தங்களது தாக்குதல் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது. அந்த தாக்குதலில் உயிரிழந்த 47 பேரின் உடல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இறந்திருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே பொதுமக்கள் குடியிருக்கும் இடங்களில் இஸ்ரேல் நடத்திவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என எகிப்து கோரிக்கை விடுதுள்ளது. காயம் அடைந்த பாலஸ்தீன மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக ரஃபா எல்லைப் பகுதியின் வழித்தடம் திறக்கப்படும் என்றும் எகிப்து முதல் முறையாக அறிவித்துள்ளது.