கோலாலம்பூர், டிச 24 – டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 22,413 பேராக அதிகரித்தது. இந்த ஆண்டின் 51ஆவது வாரமான கடந்த வாரத்தில் கோவிட் தொற்றின் காரணமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக குறைந்தது என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே விழாக்காலம் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசங்களை அணிந்து செல்லும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.