கோலாலம்பூர், மார்ச் 24 – ஸ்ரீ கெம்பாங்கானில்தாமான் இம்பியான் இன்டா அடுக்ககத்திற்கு வெளியில் தரையில் போலீஸ் கார்ப்பரல் ஒருவர் நேற்று காலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். 34 வயதுடைய அந்த போலீஸ்காரர் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதால் இறந்தார் என நம்பப்படுகிறது. இறந்தவர் கோலாலம்பூர் போலீஸ் படையைச் சேர்ந்த சுறுசுறுப்பாக கடமைய ஆற்றிய அதிகாரி என சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Hussein Omar Khan தெரிவித்தார். அந்த போலீஸ்காரர் இறந்த இடத்தில் இருந்ததாக நம்பப்படும் கும்பலைச் சேர்ந்தவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுவரை சந்தேகப் பேர்வழிகள் எவரும் கைது செய்யப்பட்வில்லையென செய்தியாளர்களிடம் Hussein கூறினார். அந்த போலீஸ்காரரின் மரணத்தை கண்டறிவதற்காக சவப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அதன் பின் அவரது உடல் சரவாக், கூச்சிங்கிலுள்ள அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் கொண்டுச் செல்லப்படும் என Hussein தெரிவித்தார்.