Latestமலேசியா

கெடாவில், பசியால் பணம் கேட்டு கத்தி முனையில் குழந்தையை கடத்த முயன்ற நேப்பாள ஆடவன் கைது

குவாலா மூடா, நவம்பர் 27 – கெடா, குருன், தாமான் செரி ஜெனியாங்கில், கத்து முனையில், குழந்தையை கடந்த முயன்ற நேப்பாள ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.

நேற்று காலை, குருனிலுள்ள, உணவகம் ஒன்றுக்கு வெளியே அச்சம்பவம் நிகழ்ந்தது.

உணவு வாங்குவதற்காக, ஆடவர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளின் முன்புறம், பிள்ளையை அமர செய்து விட்டு உணவகத்திற்குள் சென்றுள்ளார்.

அவர் திரும்பி வந்த போது, நேப்பாள ஆடவன் ஒருவன், அவரது பிள்ளையை கத்தி முனையில் பிடித்திருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.

சம்பவத்தின் போது, பசியால் இருந்த அவ்வாடவன், புரியாத மொழியில் பணம் கேட்டு அந்த நபரை மிரட்டியுள்ளான்.

எனினும், சில நிமிடங்களில், அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

சம்பவ இடத்தை சென்றடைந்த போலீசார் அவ்வாடவனை கைதுச் செய்ததோடு, அவனிடமிருந்து வேலை அனுமதியையும் பறிமுதல் செய்ததை, குவாலா மூடா போலீஸ் தலைவர் ஜைடி செ ஹசான் உறுதிப்படுத்தினார்.

ஒரு மாதத்திற்கு முன், கெடாவிலுள்ள, ஜிமாட் ஜெயா தொழிற்சாலையில் பணிப்புரிவதற்காக தருவிக்கப்பட்ட அவ்வாடவன், இம்மாதம் எட்டாம் தேதி, வேலை அழுத்தம் காரணமாக முதலாளியிடமிருந்து தப்பிச் சென்றது தொடர்பில் போலீஸ் புகார் ஒன்று செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனால், கடந்த சில நாட்களாக உணவு இல்லாமல் அழைந்து திரிந்த அவன், பசி காரணமாக, குழந்தையை காட்டி அஞ்சுறுத்தி பணம் பெற முயன்றதாகவும் ஜைடி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!