ஜோகூர் பாரு, ஜனவரி 11 – மலேசியாவும், சிங்கப்பூரும், தங்கள் நாடுகளின் தரைமார்க்கமான எல்லை சோதனை சாவடிகளில், QR குறியீடு முறையைப் பயன்படுத்தி, கடப்பிதழ் இல்லாத பயண முறையை அறிமுகப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றன.
SEZ எனப்படும் ஜோகூர் – சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வளர்ச்சியை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளில், அந்த கடப்பிதழ் இல்லாமல் எல்லையைக் கடக்கும் பயண முறையும் ஒன்றாகுமென, இரு நாடுகளின் பொருளாதார அமைச்சுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, கடப்பிதழ் இல்லாத QR குறியீட்டு பயண முறையை அமல்படுத்துவதன் வாயிலாக, இரு நாடுகளின் சோதனை சாவடிகளில், கூட்ட நெரிசலையும் தவிர்க்க முடியுமெனவும் அவை குறிப்பிட்டுள்ளன.