Latestமலேசியா

அன்வார் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியை நிறுத்துவீர் – புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் பெரிக்காத்தான் நேசனலுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 29 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியை உடனடியாக நிறுத்திக் கொள்ளும்படி அவருக்கு நேற்று வெளிப்படையான ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்திருக்கும் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையட் அபு ஹுசின் ஹபீஸ் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். அரசாங்கத்தை கவிழ்க்கும் திட்டத்திற்கான முயற்சியை நிறுத்திக்கொண்டு எதிர்க்கட்சி என்ற முறையில் ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றும்படி எதிர்க்கட்சி முன்னணியான பெரிக்காத்தான் நேசனலை பெர்சத்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சையத் அபு ஹுசின் வலியுறுத்தினார்.

அதோடு அரசாங்கத்துடன் உடன்பாடு காண்பதில் தோல்வி கண்ட பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியையும் அவர் சாடினார். அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளப் போவதாக சாக்குப்போக்கு கூறிக்கொண்டு அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதை நீங்கள் புறக்கணித்து வருகிறீர்கள். நீண்ட காலமாக நாம் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளப் போகிறோம் என பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இது நடக்கும் என்பதற்கான தெளிவான அறிகுறி தெரியவில்லையென சையட் அபு ஹுசின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!