மாணவிகளுக்கான காற்பந்து போட்டி நோவாஸ்கோஷியா தோட்ட தமிழ்ப்பள்ளி வெற்றி
ஈப்போ, டிச 11 – பேரா இந்தியர் கால்பந்து சங்கம் முதல் முறையாக 12 வயதிற்கு கீழ்பட்ட பேரா தமிழ்ப்பள்ளி மாணவிகளுக்கான காற்பந்துப் போட்டியை சிறப்பான முறையில் நடத்தியது. ஈப்போ புந்தோங் மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 15 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த குழுவினர் கலந்து கொண்டர். இப்போட்டியின் இறுதியாட்டத்தில் நோவாஸ்கோஷியா தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவிகள் 1 – 0 என்ற கோல் கணக்கில் ஆயர் தாவார் தமிழ்ப் பள்ளி குழுவை வீழ்த்தியதன் மூலம் 500 ரிங்கிட் பரிசை வென்றனர். இரண்டாவது இடத்தை பெற்ற ஆயார் தமிழ்ப்பள்ளி குழுவினர் 300 ரங்கிட்டையும், மூன்றாவது இடத்தை பெற்ற புந்தோங் மெதடிஸ் தமிழ்ப் பள்ளி குழுவினர் 200 ரிங்கிட்டையும் பரிசாக பெற்றனர்.
பேரா இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்ற இப்போட்டிக்கு ஆதரவு வழங்கிய பிவி நகைக் கடை உரிமையாளர் அமால் ஷா அமாலுடின் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களாக போலீஸ் துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் வெள்ளையம்மாள் கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் சூரிய குமார், இன்ஸ்பெக்டர் ரினொஷா செல்லதுரை ஆகியோர் கலத்துக்கொண்டனர்.
முதல் முறையாக நடத்தப்பட்ட இப்போட்டியில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் இறுதி நேரத்தில் விண்ணப்பம் செய்ததால் வாய்ப்பு வழங்க இயலவில்லை . அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ந்து அதிகமான குழுக்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று பேரா மாநில இந்தியர் காற்பந்து சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் கூறினார்.