Latestஉலகம்

ஆசிய ஹாக்கிப் போட்டி மலேசியா உட்பட 6 நாடுகள் பங்கேற்பு

சென்னை , ஏப் 25 – ஆசிய சாம்பியன்ஷீப் கிண்ணத்திற்கான ஹாக்கிப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிவரை சென்னை மேயர் ராதகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அந்த போட்டியில் மலேசியா, நடப்பு சாம்பியனான தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான் , சீனா , ஜப்பான் ஆகிய ஆறு அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தியாவுடனான நட்புறவு சீராக இல்லாததால் இப்போட்டியில் சீனா மற்றும் இந்திய அணிகள் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது. ஆனால் அந்த இரண்டு நாடுகளும் இப்போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!